கடவுள் சக்தி இதுதான்!

Viduthalai
1 Min Read

கோயிலுக்குச் சென்றபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிழப்பு 

நாகை, பிப்.21- மதுரையில் இருந்து குலதெய்வ வழிப்பாட்டிற்குச் சென்ற வர்கள் தேவிப்பட்டினம் கடலுக்குள் சற்று தொலைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற படகு தடுமாறியது. படகில் இருந்து மணிமேகலை (வயது 54), இருளாளி(56) ஆகிய 2 பேரும் தடுமாறி கடலுக்குள் விழுந்தனர். உடனே அவர்களை காப்பாற்ற படகில் இருந்த உறவினரான பொறியாளர் முத்துமாரி(33) என்பவர், கடலில் குதித்தார். 

அவரும் கடலில் மூழ்கினார். சிறிது நேரத்தில் இரண்டு பெண்களின் உடலும் கரை ஒதுங்கியது.

கடலில் மூழ்கிய முத்துமாரியின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *