ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 5.3.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

👉புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவரை பிடிக்க தனிப்படை காவல்துறை டில்லி விரைந்தது. பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவை கைது செய்ய 7 பேர் கொண்ட தனிப்படை டில்லி விரைந்தது. 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

👉அதானி குழுமத்திற்கு மோடி அரசு  ‘ஏகபோகங் களை’ வழங்கி, மக்களை சுரண்ட அனுமதிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தி இந்து:

 👉 மதம் மாறியவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் தகுதி வழங்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பாலகிருஷ்ணன் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது

👉தருமபுரியைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் தினசரி மனிதக் கழிவுகளை எடுக்கிறார்கள் – இது நிர்வாக சீர்கேடு மற்றும் ஜாதியச் சார்புகளைக் கொண்ட மனிதாபிமானமற்ற வேலை; நிர்வாகம் நாள் தோறும் தங்களை எப்படி நடத்துகிறது, உரிமைகளை வெளிப்படுத்துவது ஏன் கீழ்ப்படியாமை என்று தொழிலாளர்கள் பேசுகிறார்கள் என்பதை கட்டுரை யாளர் சிறீவித்யா விவரித்துள்ளார்.

தி டெலிகிராப்:

👉 பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் – வளாகத்தில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட தடை விதித்துள்ளது, மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *