தந்தை பெரியார் சிலையை, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்படுத்த நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இணையவழி கையெழுத்து இயக்கம்

குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்படுத்த நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செயலுக்கு உறுதுணையாக இருந்த நகராட்சி மன்றத் தலைவர் திரு எஸ்.சவுந்தரராஜன் அவர்களை சந்தித்து கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவகுமார், மாவட்ட செயலாளர் இ.தமிழ் தரணி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன், மாவட்டக் காப்பாளர் வி.சடகோபன், குடியேற்றம் நகரத் தலைவர் சி.சாந்தகுமார், மாவட்ட ப.க.அமைப்பாளர் மா.அழகிரிதாசன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா நகர ப.க.தலைவர் பா.ஜீவானந்தம், நகர ப.க.செயலாளர் பிரகாசம்,  மாவட்ட ப.க.துணைச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் நகர மன்றத் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். குடியேற்றம் நகர மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் நகர திமுக துணைச் செயலாளர் ஜம்புலிங்கம் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. (குடியேற்றம், 1.9.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *