தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு ரூ.2087 கோடி நிலுவை

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 24– மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2087 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2026-2027 நிதியாண் டில் கடந்த ஏப்.1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 29.83 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 31.47 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப் பட்டு, 3.22 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.1804 கோடி செலவிடப் பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் வளர்ச்சி அடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (விபி-ஜி ராம் ஜி) தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் நிதி பங்கீடு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 81.39 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 103.18 லட்சம் தனி நபர் தொழி லாளர்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1,38,314 மாற்றுத் திறனாளிகள், 581 திருநங்கைகள் உள்ளடங்குவர். ஜூலை 25-ஆம் தேதி நிலவரப்படி 26.75 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மாநிலத்தில் உருவாக்கப்பட்ட மொத்த மனித சக்தி நாட்களில் 87.08 சதவீதம் பெண்கள், 29.69 சதவீதம் எஸ்சி, எஸ்டி குடுங்களை சேர்ந்த பயனாளிகளால் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரத்தை கேட்டிருந்தார். அதற்கு, ரூ.2087 கோடி ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டி இருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை பதில் அளித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *