* சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். * இராஜபாளையத்தில் சிறப்பாக இயங்கி வரும் சிறுவர்கள் நூலகத்திற்கு இயக்க வெளியீடுகளை தமிழர் தலைவர் நூலகப் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி , விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராஜா அருண்மொழி, இராஜபாளையம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஞானராஜ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.

* இராஜபாளையத்தில் சிறப்பாக இயங்கி வரும் சிறார் நூலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். நூலகம் மற்றும் கூட்ட அரங்கத்தை பார்வையிட்ட தமிழர் தலைவர் பாராட்டினார்.

* விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெத்தையா – ராஜேஸ்வரி ஆகியோர்களின் பிள்ளைகள் உதித்த பாரதி, இலக்கியா பாரதி ஆகியோர் உண்டியலில் சேமித்த தொகையை பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினர். * இராஜபாளையம் நந்தா தங்கும் விடுதியில் உரிமையாளர் நந்தா ராஜா அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். * சிவகாசி சென்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் திமுக, திராவிடர் கழகத் தோழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
