தென்கொரியாவை உலுக்கும் கடும் வெப்ப அலை.

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சியோல், ஆக. 15- வரலாறு காணாத வெப்பத்தால் தென் கொரிய மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அந் நாட்டு விவசாயிகளும் புதுவித பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அங்கு நிலவி வரும் வெப்ப அலை காரணமாக நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்குகள் மண்ணுக்கு அடியிலேயே வெந்து நாசமாவதாக தென்கொரிய விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

தென் கொரியா, ஜப் பான் மற்றும் ஹாங்காங் ஆகிய பகுதிகளில் சமீபத்திய வாரங்களில் வர லாறு காணாத வெப்பம் நிலவியது. கிழக்கு ஆசியா முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வெப்ப அலையின் ஒரு பகுதியாகவே, மேற்கண்ட பயிர் சேதம் பதிவாகி உள்ளது. உருளைக்கிழங்கு மட்டுமல்ல ஸ்ட்ராஃபெர்ரி, தர்பூசணி உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சவுத் ஜியோல்லா மாகாணத்தில் உள்ள டாமியாங் மாகா ணத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாத்து வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் வெப்ப அலை காரணமாக முழுமையாக கருகி நாசமாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். தவிர கேரட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் கருப்பு நிறமாக மாறிப் போனதால், அவற்றை அப்படியே நிலத்திலேயே உழுது அழிக்க வேண்டிய கட்டாயம் அந்நாட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *