பணி நேரத்தில் போக்குவரத்துக் காவல்துறையினர் அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.4- பணியில் இருக்கும்போது போக்கு வரத்துக் காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறி வுறுத்தியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் சிக்னலில் பெண் ஒருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. உயர் நீதிமன்றத்திற்கு வரும் வழியில் இந்த விபத்தைக் கண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்து பணியில் உள்ள காவல்துறையினர் கைப்பேசியில் பேசுவதிலும், பாட்டு கேட்பதிலும், காட்சிப் பதிவு பார்ப்பதிலும் தீவிரங் காட்டுவதால் தான் இதுபோன்ற விபத்துகள் நேர்வதாக கருத்து தெரிவித்திருந்தார். பணியில் இருக்கும்போது போக்குவரத்துக் காவல்துறை யினர் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என சுற்றறிக்கை பிறப்பிக்கப்படவேண்டும் எனவும் தமிழ்நாடு டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *