ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு 2021-2022 நிதியாண்டில் ரூ. 1,811 கோடியாக குறைந்த சமையல் எரிவாயு உருளை மானியம்!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 12 ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி, அந்த நிறுவனங்களுக்கு மட்டும்  ரூ.22 ஆயிரம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக கொடுத்துள்ளது.

 சமையல் எரிவாயு உருளை விலை தற்போது 1,018 ரூபாயைக் கடந்துள்ள நிலையில், அவற்றிற்கு  ஒன்றிய அரசால் வழங்கப்படும் மானியம் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது.  2018_2019 நிதியாண்டில் ரூ. 37  ஆயிரத்து 209 கோடியும் 2019 -_2020 நிதியாண்டில் ரூ. 24 ஆயிரத்து 172 கோடியும் 2020_-2021 நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் 896 கோடியும் மானியமாக வழங்கப்பட்டது.  இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டுக் கொண்டே வந்த மானியத் தொகை, கடந்த 2021_-2022  நிதியாண்டில் பல மடங்கு குறைக்கப்பட்டு, தற்போது வெறும் ரூ. ஆயிரத்து 811 கோடி என்ற அளவிற்கு தள்ளப்பட்டு உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள  குடும்பங்கள், பெண்களைக் குடும் பத் தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2016-ஆம் ஆண்டு 8 கோடி இணைப்புகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இந்த  இணைப்புகளின் எண்ணிக்கையானது 2023-ஆம் ஆண்டில் வெறும் 1.6 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 6.5 கோடி குடும் பங்கள் மானியமல்லாத சமையல்  எரிவாயு உருளை வாங்குவதற் கான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு ஏழை மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கும் ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி, அந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 22 ஆயிரம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக கொடுத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *