பழநியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேர் கைது

2 Min Read

பழநி, ஜூலை 30– பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலமோசடி வழக்கில் நிலம் விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை ஜூலை 6-ஆம் தேதி சார்பதிவாளர் (பொறுப்பு) ஜஸ்டின் மணிகண்டன் தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்பதிவாளர், நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள் – முருகதாஸ் சுவாமிகள் – தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கியோர் உள்ளிட்டோர் மீது பழநி அடிவாரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

பதிவுத்துறை சார்பில் அமைக்கப் பட்ட உயர்நிலைக் குழுவும் விசாரித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. நிலத்தை வழங்கிய பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புசாமி மணியக்காரரின் வாரிசுகள் சுந்தரி, அவரது மகன் விஷ்ணு சுதர்சன், மகள் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் (28.7.2026) சிபிசிஅய்டி அலுவலகத்தில் ஆஜராகி, 1880-இல் தர்ம காரியத்துக்காக எழுதிக் கொடுத்த நிலத்தின் மூலப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

இதனிடையே நிலத்தை விற்றோர், வாங்கியோரை இதுவரை கைது செய்யாதது ஏன் என பல தரப்பிலும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், அறக்கட்டளை நிர்வாகி விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான் குளத்தைச் சேர்ந்த வெள்ளைத் துரை, பத்திரப்பதிவுக்கு உதவியாக இருந்த பழநி கவுண்டன்குளத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் அன்வர்தீன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினமும் மற்றொருவரான பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி நேற்றும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து திண்டுக்கல் சிபிசிஅய்டி அலுவலகத்துக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். அங்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஷாஜிதா,   காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் அஜய் தங்கம் விசாரித்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதனிடையே, ஜஸ்டின் மணிகண்டன் நேற்று (29.7.2026) 3-ஆவது நாளாக விசாரணைக்கு ஆஜரானார். அவருக்கு ஆக.3 வரை நிபந்தனை இடைக்கால முன் பிணை வழங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *