100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் பா.ஜ.க. பிரமுகர் கைது

Viduthalai
1 Min Read

அரசியல்

திண்டுக்கல், மார்ச் 13- வேடசந்தூர் அருகே 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சிறீராம புரத்தை சேர்ந்தவர் அம்பிகா (வயது 39). இவர், 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக உள்ளார்.

இந்த நிலையில் அம்பிகா, வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், சிறீராமபுரத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான மோடி பிரசாத் (வயது 40) என்பவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், தகாத வார்த்தை களால் பேசியதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோடி பிரசாத்தை கைது செய்தனர்.

இதற்கிடையே மோடி பிரசாத் கைது செய்யப் பட்டதை அறிந்த பா.ஜ.க.வினர் ஏராளமானோர் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *