டிஎன்பிஎஸ்சி நடத்தும் தொழில்நுட்பப் பணி தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 22– டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வுகளுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பின்னர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிரித்ததாலும், புதிய பதவிகள் சேர்க்கப்பட்டதாலும் கூடுதலாக 15 காலியிடங்கள் சேர்த்து மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 461-லிருந்து 478 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு களுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரையும், தொடர்ந்து செப்டம்பர் 7 முதல் 19ஆம் தேதி வரையும் இடைவெளி விட்டு நடத்தப்பட உள்ளன. அனைத்து பதவிகளுக்கும் பொதுத் தேர்வான கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவு தாள் தேர்வு செப்டம்பர் 19ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

மேலும், இளநிலை அறிவியல் அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), உதவி புள்ளியியல் ஆய்வாளர், ஜூனியர் ஆர்க்கிடெக்ட் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆகிய பதவிகளில் காலிப் பணியிடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 476-லிருந்து 508 ஆக அதிகரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *