ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 15.3.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ‘இந்தியா’ ‘ஹிந்து ராஷ்டிராவாக’ மாற்ற தேவையில்லை. ஏற்கனவே அப்படித்தான் உள்ளது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* விஞ்ஞான, தொழில் நுட்பத்தை சில அரசியல் கட்சி கள் தவறாக பயன்படுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* லண்டனில் ராகுல் பேச்சை முழுமையாக கேட்காமல், இந்திய தொலைக்காட்சிகள் உண்மைகளை மறைத்து செய்திகள் வெளியிடுகின்றன என காங்கிரஸ் கட்சியின் அயலக தலைவர் சாம் பிட்ரோடா விமர்சனம். 

தி ஹிந்து:

* ஓபிசி உட்பிரிவு குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையம், சமூக பொருளா தார ஜாதி கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையின் தகவல் பெறாமல் செயல்படுகிறது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புதல்.

தி டெலிகிராப்:

*அதானி விவகாரத்தில் போராட்ட வியூகங்களை வகுக்க எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தெலங்கானா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தும் ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *