சென்னை பிராட்வே பேருந்து நிலை யம் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டு வரும் நிலையில், அதனைத் தற்காலிகமாக கடற்கரை சாலையிலிருந்து ராயபுரம் செல்லும் குறுகலான பகுதியில் (முன்பு ராயபுரம் குட்ெஷட் இருந்த பகுதிக்கு) மாற்றி, கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, அப்பகுதி கடும் போக்கு வரத்து நெரிசலால் தவிக்கும் சூழலில், அப்பேருந்து நிலையத்திற்கு நேர் எதிரில், இப்ராஹிம் சாஹிப் சாலையிலேயே திடீரென ஒரு கடவுள் சிலை வைக்கப்பட்டு, அடுத்த இரண்டு நாள்களில் அவசர அவசரமாகக் கட்டடப் பணிகளும் நடந்து வருகின்றன.
‘‘நடைபாதைகள் நடக்க மட்டுமே’’ என்று உச்சநீதிமன்றம் அண்மையில்கூட காட்டமாகக் கூறியிருக்கிறது.
சென்னையின் முக்கியமான இப்பகுதியில், வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் சாலை ஆக்கிரமிப்பைத் தடுக்கவேண்டியது யார்?
சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்துவார்களா?
