குரூப் 2, 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு! சான்றிதழ்களைப் பதிவேற்ற டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

1 Min Read

சென்னை, ஜூலை 14–- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான தற்காலிகத் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றுவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்வாணையச் செயலாளர் பனோத் ம்ருகேந்தர் லால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி 2 மற்றும் தொகுதி 2ஏ) பணிகளுக்கான தேர்வு முடிவுகள், மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன.அதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில், கணிவிழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 13-ஆம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிகமாக அனுமதிக்கப் பட்டுள்ள தேர்வர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடு மற்றும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: பதிவேற்றம் தொடங்கும் நாள்: ஜூலை 15, 2026. பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: ஜூலை 24, 2026.
பதிவேற்றும் வழிமுறை: தேர் வாணைய இணைய தளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு (OTR) பிரிவின் மூலம் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு விற்குள் (ஜூலை 24-க்குள்) தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள், தேர்வின் அடுத்த கட்ட நிலைக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்வாணையம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வர்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து சான்றிதழ்களைப் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *