திருச்சி, ஜூலை 3- 8ஆம் வகுப்பு மாணவி பி.எம்.சாத்விகா, திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற 9ஆவது சதுரங்கப்போட்டியில், 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் பங்கேற்ற பிரிவில் 5ஆம் இடமும், மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு 2ஆம் இடமும் பெற்று பள்ளிக்குப்பெருமை சேர்த்தார்.
9ஆம் வகுப்பு மாணவி வி.சஹானா, திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற 9ஆவது சதுரங்கப் போட்டியில் 15 வயதிற்குட் பட்ட மாணவிகள் பங்கேற்ற பிரிவில் 8ஆம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்றார்.
10ஆம் வகுப்பு டி.விசாந்தினி மற்றும் 12ஆம் வகுப்பு டி.கீர்த்திகாசிறீ Talent Fest Trichyயில் நடைபெற்ற டேக்வோண்டோ போட்டியில் கலந்து கொண்டு கோப்பையையும், சான்றி தழையும் வென்றனர்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
