குமரியில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க அனுமதி நீட்டிப்பு! தமிழ்நாடு அரசின் இரட்டை வேடம்! கனிமொழி கருணாநிதி எம்.பி. கடும் கண்டனம்!

4 Min Read

சென்னை, ஜூலை 2 – ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க த.வெ.க. அரசு அனுமதியை நீட்டித்திருப்பது தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். “இது தமிழ்நாடு அரசின்இரட்டை வேடம்’’ என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழிகருணாநிதி எம்.பி. தமது சமூக வலைதளப்பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக் குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசின் இந்திய அரிய மணல் ஆலைக்கு, அணுசக்தி கனிமங்களை வெட்டியெடுப்ப தற்கான கால அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து த.வெ.க. அரசு உத்தர விட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கிள்ளியூர் தாலுகாவுக்குட்பட்ட கீழ் மிடா லம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழு தேசம் மற்றும்கொல்லங்கோடு ஆகிய 5 முக்கிய கடலோரக் கிராமங்களில், சுமார் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் அணு தாதுமணல் (இல்மனைட், ருட்டைல், ஜிர்கான்,மோனசைட்) வெட்டி எடுக்கும் நட வடிக்கைக்காக பூர்வாங்க பணிகளை ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான அய்.ஆர்.இ.எல். தீவிரப்படுத்தியது.

கடலோர மக்களின்
கடும் எதிர்ப்பு!

இதற்கு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடலோர கிராம மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கருத்து கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே இத்திட்டம் நாட்டின் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறி, இதற்கான பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்துவதிலிருந்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2025 ஜூலை மாதம் விலக்கு அளித்தது.

இதைதொடர்ந்து, இத்திட்டத்திற்கான இறுதி அனுமதியைப் பெறும் நோக்கில், அய்.ஆர்.இ.எல். நிறுவனம் கடந்த மார்ச் 26 அன்று, ஒன்றிய அரசிடம் புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், ஆண்டுக்கு 15 லட்சம் டன் அணு தாதுக்கள் வெட்டி எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்திய ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அரியவகை கனிம வழித்தடங்கள் அமைக்கும் திட்டமும் இதற்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மீனவர் களின் எதிர்ப்பால் ஆரம்பக் கட்டத்திலேயே முடங்கியுள்ள வேளையில், தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஒன்றிய அரசுடன் இணக்கமான உறவு என்ற புதிய அணுகுமுறையை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், கன்னியா குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசின் இந்திய அரிய மணல் ஆலை அணுசக்தி கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான கால அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து த.வெ.க. அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலு காவில் உள்ள பல்வேறுகிராமங்களில் தாது மணல் எடுப்பதற்காகஒதுக்கப்பட்டிருந்த இடங்களுக்கான காலாவதி தேதியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1957 ஆம் ஆண்டின் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலாவதி தேதி!

கிள்ளியூர் தாலுகாவில் உள்ள கீழ்மிடாலம்-ஏ, மிடாலம்-பி, இனயம்புத்தன்துறை, எழு தேசம்-ஏ, எழுதேசம்-பி, எழுதேசம்-சி, கொல்லங்கோடு-ஏ மற்றும் கொல்லங்கோடு-பி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட மொத்தம் 1144.06.18 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுசக்தி கனிமங்களை வெட்டியெடுக்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அய்.ஆர்.இ.எல் நிறுவனத்தின் கோரிக்கையையும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரின் பரிந்துரையையும் ஏற்று, இந்த சுரங்க ஒதுக்கீடு காலத்தை 10.06.2027 வரை ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) சுன்சோங்கம் ஜடக் சிரு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் நகல்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், இந்திய அணுசக்தித் துறை மற்றும் அய்.ஆர்.இ.எல் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஆகியோருக்குத் தகுந்த நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அனுமதி நீட்டிப்பின் மூலம் மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையின் உற்பத்திப் பணிகள் எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து, கடற்கரை மணல் அணு கனிமச் சுரங்க திட்டத்தை செயல்படுத்துவதற்கான கடலோர ஒழுங்குமுறை அனுமதியைப் பெறும் முயற்சியை அய்ஆர்இஎல் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு கிள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார கடலோர கிராம மக்களிடையே நீண்டகாலமாக எதிர்ப்பு நிலவி வருவதால், அரசின் புதிய நீட்டிப்பு உத்தரவு மீண்டும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 த.வெ.க. செயற்குழுவில் கண்டனமும்…
தமிழ்நாடு அரசின் அனுமதியும்….

தவெக மாநில செயற்குழு கூட்டம் 3.11.2024 இல் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்திற்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 21 ஆவது தீர்மானமாக ‘இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையாகத் திகழும் கன்னியாகுமரி பகுதியில், அணுக் கனி மங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதி லும் த.வெ.க உறுதியாகஇருக்கும் என்றும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இத்தகைய திட்டங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும் அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

ஆனாலும் இந்தநிலையில் சுரங்க பணிகளுக்கான அனுமதியை ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *