பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சமூகப்பணித்துறை சார்பாக நெருப்பில்லா சமையல் போட்டி-2023

Viduthalai
1 Min Read

அரசியல்

வல்லம், மார்ச்18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப்பணித்துறை சார்பாக “”நெருப்பில்லா சமை யல் போட்டி”” 14.03.2023 அன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு அறி முகவுரை பேராசிரியர் ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின், பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் (பொ) இயக்குநர்,  அறிமுகவுரை ஆற்றினார். இப்போட்டியில் எரி பொருள் தவிர்த்து இயற் கையோடு ஒன்றித்த உணவை சமைக்கும் திறனை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக ஏற்பாடு செய் யப்பட்டது. இதில் பல்வேறு துறை களை சார்ந்த மாணவர்களும், பேராசிரியர்களும் பார்வையிட்டு சமூக பணித் துறையில் இந்த முயற்சியை பாராட்டினர். 

இந்நிகழ்ச்சியை ஆராய்ச்சி புல முதன்மை யர் பேராசிரியர் குமரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மேலும் இப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரி யர் செ.வேலுச்சாமி மற் றும் பல்கலைக்கழக பதி வாளர் பேராசிரியர் பி.கே. சிறீவித்யா, கல்வி புல முதன்மையர் பேராசிரியர் ஜார்ஜ் பார்வையிட்டு பங்கேற்ற அனைவரையும் வாழ்த்தினார். 

இந்நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டி யில் நடுவராக சித்ரா (உதவி பேராசிரியர் கட் டட எழிற்கலை துறை) மற்றும் பேராசிரியர் பரமேஸ்வரன் (துறைத் தலைவர்  சமூகப்பணித் துறை) நடுவராக செயல் பட்டு சிறந்த போட்டியா ளருக்கும் இப்போட்டி யில் வெற்றிபெற்ற மாணவ  மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *