பி.ஜே.பி. எதிர்ப்பு வலுக்கிறது அ.தி.மு.க.வில்

Viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 19- திமுகவில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சேர்ந்த விவகாரம், இரு கட்சிகளிடையே வார்த்தைப் போரில் தொடங்கி பழனி சாமி உருவப்படம் எரிப்பு வரை நீண்டது.

இந்த சூழலில், நேற்று முன் தினம் (17.3.2023) சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘‘கூட்டணிக்காக இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன். அதிமுகவு டன் கூட்டணி தொடர்ந்தால் எனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்’’ என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது.

இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந் தாலும், ஒரு வகையில் அவர்க ளுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத் தியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (18.3.2023) செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அரசியல் கட்சி கள் நல்லிணக்கத்தோடு இருந்த நிலையை மாற்றி, வார் ரூம் நடத்தி, சொந்த கட்சிக்காரர் களையே கொச்சைப்படுத்துவது பாஜகவில் இந்த காலகட்டத்தில் தான் உருவானது. அவர் எடுக் கும் முடிவு நல்ல முடிவுதான். அன்புடன் வரவேற்கிறோம்’’ என்றார்.

மேனாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறும்போது, ‘‘தமிழ் நாட்டில் அதிமுகதான் கூட் டணி குறித்தும், தொகுதி ஒதுக் கீடு குறித்தும் முடிவு செய்யும். அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும், கூட்டணியை வழிநடத்தும்’’ என்றார். மேனாள் அமைச்சர் பொன்னையன் கூறும் போது, ‘‘பாஜகவின் கொள்கை வடநாட்டு அரசியலை, ஹிந்தி வெறியர்களை ஊக்குவிப்பது. திராவிடர் கொள்கை, தமிழ் நாட்டு மக்கள், மொழியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது. இரு கட்சிகளின் கொள்கைகள் வேறு. இன்றைய நிலையில் கூட் டணி தொடர்கிறது’’ என்றார்.

மேனாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சியோடு தான் கூட்டணி வைக்கப்படும். குட்ட, குட்ட குனியும் ஆள் நாங்கள் கிடை யாது. எங்களை யாரும் குட்ட வும் விடமாட்டோம். நாங்கள் குனியவும் மாட்டோம்’’ என்றார்.

பெயர் சொல்ல விரும்பாத கட்சி நிர்வாகிகள் சிலர் கூறும் போது, ‘‘மடியில் கனம் இல்லாத நிர்வாகிகள் பாஜக உடனான கூட்டணியை ஏற்கவில்லை. மத்திய முகமைகளின் வழக்கை எதிர்கொள்வோரின் நிர்பந் தத்தால் பழனிசாமி வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

நேற்று கட்சிப் பொறுப்புக்கு வந்தவர்களெல்லாம் அதிமு கவை விமர்சிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. இதில் பழனிசாமி அமைதி காப்பதை ஏற்க முடிய வில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்து, சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததால் தான் ஆட்சியையும் இழந்து நிற்கி றோம். பாஜகவுடனான கூட் டணி விவகாரத்தில் பழனிசாமி துணிவுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

காவல் ஆணையரிடம் மனு: இதற்கிடையே, அதிமுக அலுவ லகத்துக்கு ஓபிஎஸ் ஆதரவா ளர்கள் வரக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி, தலைமை அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவல கத்தில் மேனாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மனு அளித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *