சென்னை, ஜூன் 14- நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்களில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பதிவுக் கால முறையில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்ற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.chennai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பெறலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Leave a Comment
