தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (21.3.2023) முகாம் அலுவலகத்தில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் சந்தித்து, மதுரையில் 25.3.2023 அன்று நடைபெறவுள்ள மதுரை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்கள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books