சென்னை, நவ.4- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (04.11.2023) தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் “நடப்போம் நலம் பெறுவோம்” 8 கி.மீ Health Walk திட்டத்தை சென்னை, அடையாறு, பெசன்ட் நகரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, தாயகம் கவி, அசன் மவுலானா, பிரபாகர் ராஜா, பரந்தாமன், மயிலை த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்தராவ், இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை டாக்டர். டி.எஸ். செல்வவிநாயகம், காவல்துறை துணை ஆணையர் (அடையார்) பொன்.கார்த்திக்குமார், மண்டல குழு தலைவர்கள் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தழுவிய அளவில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் – இன்று தொடக்கம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books