சென்னை, நவ.4- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (04.11.2023) தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் “நடப்போம் நலம் பெறுவோம்” 8 கி.மீ Health Walk திட்டத்தை சென்னை, அடையாறு, பெசன்ட் நகரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, தாயகம் கவி, அசன் மவுலானா, பிரபாகர் ராஜா, பரந்தாமன், மயிலை த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்தராவ், இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை டாக்டர். டி.எஸ். செல்வவிநாயகம், காவல்துறை துணை ஆணையர் (அடையார்) பொன்.கார்த்திக்குமார், மண்டல குழு தலைவர்கள் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.