மழைக்காலங்களில் ஏற்படும் மின் தடையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை! கூடுதல் பணியாளர்களை நியமிக்க மின்வாரியம் ஒப்புதல்

1 Min Read

சென்னை, ஜூன் 2- தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து, பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காகக் கூடுதல் பணியாளர்களை தற்காலிகமாக நியமிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்புதல் வழங்கி யுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மண்டல மற்றும் வட்ட அதிகாரி களுக்கு மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மின் தடையைத் தடுக்க நடவடிக்கை!

கடந்த சில ஆண்டு களாகப் பருவமழை பெய்யும் காலங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய சென்னை புறநகர் பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், மின்தடை புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பருவமழை தொடங்கு வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

மழையினால் மின் கம்பங்கள் சரிவது, மரக் கிளைகள் முறிந்து விழுவது போன்ற அவசர காலப் பாதிப்புகளை விரைந்து சரிசெய்ய ஏதுவாக, தற்காலிகமாகக் கூடுதல் பணியாளர்களைப் பணியமர்த்திக் கொள்ள அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் வரும் பருவமழைக் காலங்களில் பொது மக்களுக்கு தடையற்ற, சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *