கோவை, மே 23 கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை ஆவேசமாகப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கொடூரச் சம்பவத்திற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லா பக்கமும் ஒலிக்கிறது’’ என்று மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் அவர்.
