மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை என்பதா? கருநாடக துணை முதலமைச்சருக்கு தலைவர்கள் கண்டனம்

1 Min Read

சென்னை, மே 23 ‘கருநாடக அரசு மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை’ என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் கருநாடக அரசு மீறுவதை அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழ் நாடு அரசு விரைவுபடுத்தி காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்று கருநாடக துணை முதலமைச்சர் கூறியிருப்பது ஏற்க தக்கதல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

மேகதாது அணை கட்ட புதிய விரிவான திட்டம் ஒன்றிய அரசிடம் வழங்கப்படும் என கருநாடக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தகைய முயற்சியை கருநாடக மாநிலம் உடனடியாகக் கைவிட வேண்டும். மேகதாது அணைத் திடடத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *