‘விடுதலை’ முன்னாள் மேலாளர் நாகரசம்பட்டி N.S.சம்பந்தத்தின் துணைவியார் திருமதி கமலா சம்பந்தம் மறைவு! கழகத் தலைவர் நேரில் இரங்கல் – இறுதி மரியாதை!

‘விடுதலை’ முன்னாள் மேலாளர் நாகரசம்பட்டி N.S.சம்பந்தம் அவர்களது துணைவியார் திருமதி கமலா சம்பந்தம் (வயது 95) நேற்று (21.5.2026) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

இன்று (22.5.2026) காலை 9 மணிக்கு அவரது இல்லத்திற்குச் சென்ற கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், அவரது மகள்கள், மருமகன்கள் மற்றும் உறவினர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

கழகத் தலைவருடன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தங்கமணி, தங்க.தனலட்சுமி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர்
சோ.சுரேஷ் மற்றும் தோழர்கள் சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *