மக்களிடம் புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தை வளர்க்க, மோடி அரசு மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 இதர மத்திய பல்கலைக் கழகங்களின் துறைகள் மூலம் ரூ.472.01 கோடி நிதியும், ரூ.19.39 கோடி மானியமும் பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக அளிக்கிறது என ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு 27.3.2023 அன்று பதில் அளித்துள்ளார்.