மின் இணைப்புப் பராமரிப்பில் சாதனை! இந்த ஆண்டில் 77 சதவீதம் கோளாறுகள் குறைந்தன தெற்கு ரயில்வே தகவல்

2 Min Read

சென்னை, மே 3- தெற்கு ரயில்வே மின் இணைப்பு பராமரிப்பில் சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வே தனது மின் இணைப்பு பராமரிப்புப் பணிகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. கடந்த 2025-2026 நிதியாண்டில் மின் இணைப்பு சாதனங்களில் ஏற்பட்ட கோளாறுகளின் எண்ணிக்கை வெறும் 3 ஆக குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டான 2024-2025இல் இதே சாதனங்களில் 13 கோளாறுகள் பதிவாகியிருந்தன. அதாவது ஒரே ஆண்டில் 77 சதவீதம் கோளாறுகள் குறைந்துள்ளன. இந்த சாதனையின் மூலம் தெற்கு ரயில்வே, நாட்டிலேயே சிறந்த மண்டலங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இன்று ரயில்கள் டீசல் இல்லாமல் மின்சாரத்தில் இயங்குகின்றன. தண்டவாளத்திற்கு மேலே கம்பிகள் வழியாக மின்சாரம் பாய்ந்து ரயிலை இயக்குகிறது. இந்த மின் கம்பிகளும் அதனுடன் தொடர்புடைய சாதனங்களும் சேர்ந்தே TRD (Traction Distribution) சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன.

ரயில் பாதைகள் இப்போது முழுமையாக மின்சார மயமாக்கப் பட்டுள்ளதால், இந்த சாதனங்கள் ஒவ்வொரு பாதையிலும் பரவியுள்ளன. இவற்றில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் ரயில் இயக்கமே முழுமையாக நிற்கும். அது மட்டுமல்ல, சிக்னல் விளக்குகளும் பாதிக்கப்படும். அதனால் ரயில்கள் தாமதமாகும், பயணிகள் சிரமப்படுவார்கள்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங் மற்றும் தலைமை மின் பொறியாளர் கணேஷ் ஆகியோரின் தொடர் கண்காணிப்பும், வழி காட்டுதலும் இந்த சாதனையில் முக்கியப் பங்கு வகித்தன. ஒவ்வொரு மண்டல ரயில்வே மேலாளரும் தங்கள் பகுதியில் உள்ள சாதனங்களை சரியான நேரத்தில் பராமரிக்கின்றார்களா என்பதை தொடர்ந்து கண்காணித்தனர். ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனமான RDSO வழங்கிய சிறப்புப் பராமரிப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றினர். இதன் விளைவாக 2025-2026 நிதியாண்டு முடியும் வரை எந்த ஒரு சாதனமும் பராமரிப்பு தவறாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இந்த சாதனையால் பயணி களுக்கு நேரடியான பலன்கள் கிடைத்துள்ளன. ரயில்கள் நேரத்தோடு புறப்படுகின்றன, நேரத்தோடு வந்து சேருகின்றன. மின் கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் நிற்கும் சிக்கல் குறைந்துள்ளது. பயணிகள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

அதிகப் பயணிகள் நெருக்கம் உள்ள பிரிவுகளிலும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனையை தெற்கு ரயில்வே தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பயணிகளுக்கு இன்னும் சிறந்த சேவையை வழங்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *