அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அமைச்சர் வலியுறுத்தல்

1 Min Read

அரசியல்

சென்னை, ஏப்.1  தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் முகக்கவசம் கட்டாயம் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச் சர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டுள்ளார்.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் மீண்டும் தாண்டவம் ஆடுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை கரோனா வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ மனைகளுக்கு வருவோர் 100 விழுக்காடு முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோர், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி யுள்ளார். மக்கள் பொது இடங் களில் முகக்கவசம் அணிவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய தினசரி கரோனா பதிப்பு இந்தியாவில் 3000க்கு மேலாகவும் தமிழ்நாட்டில் 100க்கு மேலாகவும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டு மென்று ஒன்றிய அரசு அறிவுறுத் தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *