தமிழர் தலைவர் பாராட்டு அறிக்கை
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வு தொடர்பாக நேற்று கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த எம்.பி.க்களும் கடுமையாக விவாதம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்க ளும், இந்தியா கூட்டணியின் எம்.பி.க்களும் அரசியலைமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும், சமூகநீதி அடிப்படையிலும் பல முக்கியமான கருத்துகளை எடுத்து வைத்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரையில், மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வேண்டும் என்பது எங்கள் கொள்கை என்றும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மகளிருக்கு இட ஒதுக்கீடு இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டி, ”ஓபிசி சமூகத்தைச் சார்ந்த மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் இந்த அரசுக்கு உடன்பாடு இல்லை; அதைத் தவிர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்கூட்டியே இந்த மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது என்கிற அய்யம் எழுகிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றும் குறிப்பிட்டு ஆற்றியுள்ள உரை வரலாற்றில் இடம்பெறவேண்டிய கொள்கை உரையாகும்.
அவரது எழுச்சி முழுக்கம் எங்கும் எதி ரொலிக்கட்டும்! நமது கொள்கைபூர்வ வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

