தி.மு.க.வுக்கு ஆதரவாக சென்னையில் ஏப்ரல் 20, 21 தேதிகளில் அர்விந்த் கெஜ்ரிவால் பரப்புரை

சென்னை, ஏப். 16- மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டில்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால், தி.மு.க. தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் ஏப்ரல் 20 அன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அவர் உரையாற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 21: நகரின் முக்கிய வீதிகளில் வாகன ‘சாலை உலா’ மூலம் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க. அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க. முக்கியப் பங்காற்றி வரும் நிலையில், கெஜ்ரிவாலின் இந்த வருகை தமிழ்நாடு தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் பல்வேறு தேசியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், கெஜ்ரிவாலின் வருகை குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஆம் ஆத்மி மற்றும் தி.மு.க.வின் செல்வாக்கை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களையும், தமிழ்நாடு அரசின் திட்டங்களையும் முன்னிலைப்படுத்தி இந்தப் பரப்புரை அமையும் எனத் தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *