பெரியார் – மணியம்மை மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் பி. ஜெயந்தி மறைந்தாரே!

Viduthalai
1 Min Read

அரசியல்

திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெறும் பெரியார் மணியம்மை (அரசு உதவி பெறும்) மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வும், தலைமை ஆசிரியை யாகவும் மிகத் திறம்படப் பணியாற்றி, ஓய்வு பெற்று திருச்சியிலேயே தங்கி விட்ட திருமதி பி. ஜெயந்தி  (வயது 78) அவர்கள் நேற்று (5.4.2023) உடல் நலக் குறைவால் காலமானார் என்பதை அறிய மிகவும் துயரம் அடைகிறோம்.

பணியில் இருந்தபோதும், பணி ஒய்வு பெற்ற பிறகும்கூட மிகவும் பாசத்துடனும், மரியாதை  – அன்புடனும் பழகிப் பணியாற்றிய எடுத்துக்காட்டான தலைமை ஆசிரியையாவார் அவர். 

சிறந்த பண்பாளர். அவரது சொந்த ஊரான பழனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரை இழந்துவாடும் பெரியார் கல்விக் குடும்பத்திற்கும், அவரது குருதிக் குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலையும், மறைந்த கல்வியாளருக்கு நமது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

                                                                                                                                              கி.வீரமணி

சென்னைதலைவர், 

6.4.2023பெரியார் கல்விக் குடும்பம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *