முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து
எடப்பாடி பழனிசாமி முற்றிலும் நிதானம் இழந்து பேசுகிறார்
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி கண்டனம்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அண்மைக்காலப் பேச்சுகள் அரசியல் நாகரிகத்திற்கேற்ப அமையவில்லை. தானும் ஒரு தேர்தல் போட்டியாளர் என்பதைக் கடந்து, தான் வகிக்கும் பொறுப்புகளை மறந்து, தன்னிலை இழந்து பேசிவருகிறார்.
தேர்தலில் வெற்றி – தோல்வி என்பதை விட, மக்கள் மனதில் நாம் என்னவாகப் பதிவாகியிருக்கிறோம் என்பதே முக்கியமாகும். அதில் திரு. எடப்பாடி பழனிசாமி, மிகப்பெரிய கீழிறக்கத்துக்குப் போய்விட்டார்.
‘தோல்வி உறுதி’ என்று தெளிவாகத் தெரிந்ததால், முற்றிலும் நிதானம் இழந்து, ஜன்னியில் பிதற்றுவதைப் போல அவரது பேச்சு அமைந்திருக்கிறது.
ஏற்கெனவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் குறித்துப் பேசியதும், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் குறித்துப் பேசியிருப்பதும் பண்பற்ற பேச்சுகள்; அநாகரிகத்தின் உச்சம். இது கண்டனத்திற்குரியதாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
9.4.2026

