அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு!

2 Min Read

சென்னை, ஏப். 3 – பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்ததின் அடிப்படையில் போடப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்,ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வின் முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணக்கு வந்தது. அப்போது, இரண்டு நீதிபதிகள் அடங்கிய இரு வேறு தீர்ப்புகள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்திருப்பதால், அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பி, பரிந்துரை செய்திருந்தனர்.

1.தண்டனை குறைப்பு மற்றும் முன் கூட்டியே விடுதலை செய்யும் அரசின் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா?

  1. மேற்கண்ட வழக்குகளில் எந்தெந்த சூழல்களில் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படாமல் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியும்?

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், மனோகரன், சைஃபுல்லா உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி ”அரசியலமைப்பு பிரிவுகளின்படி ஆளுநர் அமைச்சைவையின் அறிவுரையின்படி மட்டுமே செயல்பட முடியும் என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட ஷம் ஷேர் வழக்கின் தீர்ப்பின் படி ஆளுநர் நிர்வாக செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது, அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் படியே செயல்பட முடியும் என உறுதிபடுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற
அரசியல் சாசன அமர்வு!

அதே போன்று உச்சநீதிமன்ற அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வான மரு ராம் வழக்கில் ஆளுநர் பெயரளவிலான தலைவர் (Symbolic Head) மட்டுமே. முன்கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவையின் முடிவுகளில் ஆளுநர் ஒப்புதலின்றி கூட அரசு உத்தரவு போட முடியும் என கூறியுள்ளது. இவை அனைத்தையும் பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றியுள்ளது. எனவே ஆளுநர், முன் கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவையின் முடிவை நிராகரிக்க அதிகாரம் இல்லை என வாதிட்டார்.

மனுதாரர் வழக்குரைஞர்களும் இதே கருத்தை முன்வைத்தனர். அனைவரது வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

மூன்று நீதிபதிகள்
தீர்ப்பு!

நேற்று (2.4.2026) இந்த வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய மூன்று நீதிபதிகள் “தண்டனை குறைப்பு மற்றும் முன் கூட்டியே விடுதலை செய்யும் அரசின் அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்” என தீர்ப்பளித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *