தமிழ்நாடு வரும் பிரதமரை சந்திக்க இபிஎஸ் – ஓபிஎஸ் போட்டா போட்டி

1 Min Read

 சென்னை, ஏப். 7 தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளனர். பிரதமர் மோடி நாளை (8.4.2023) சென்னை வருகிறார். அப் போது, சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார். 

இந்நிலையில், பிரதமரின் சென்னை வருகையின்போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க முதல் முறையாக நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கருநாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட விசயங்களை எடப்பாடி பேச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அதிமுக வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர் செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனி னும், தற்போது வரை இருவருக்கும் பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கப் படவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்கள் தனித்தனியே சந்திக்க நேரம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *