காவிரி டெல்டா மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா?: இரா. முத்தரசன் கண்டனம்

1 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 7- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரிப் படுகைப் பகுதியில் படிப்படியாக தொடர்ந்து மேலும் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அமைக் கும் திட்டம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள் ளதுடன் கடுமையான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

மேலும், நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம்  ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்த படும் என்ற செய்தி. விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் வாழ்வில் விழுந்த பேரிடியாக அமைந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு காவிரிப் படுகை பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி களுக்கான ஆய்வுப் பணிகளும் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலுவாக அழுத்தம் தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *