இயற்கை வளங்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தமிழ்நாடு அரசு சாதனை!

2 Min Read

சென்னை, மார்ச் 30- 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான, கனிம வளங்களுக்கெனத் தனி அமைச்சகத்தை உருவாக்கும் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்தி, கனிம வள மேலாண்மையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

நிர்வாகப் புரட்சி மற்றும் தொழில்நுட்பப் பாய்ச்சல்

திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அதுவரை தொழில்துறையின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வந்த கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையைத் தனியாகப் பிரித்து, ‘இயற்கை வளங்கள் துறை’ என்ற புதிய அமைச்சகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கினார். இந்த நிர்வாக மாற்றத்தின் மூலம் பல முக்கியச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனி நிர்வாகக் கட்டமைப்பு: இத்துறைக்கெனத் தனிச் செயலாளர் மற்றும் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளதால், கோப்புகள் தேக்கமின்றி விரைவாகப் பரிசீலிக்கப்படுகின்றன.

ட்ரோன் கண்காணிப்பு: சட்ட விரோத கனிமக் கடத்தலைத் தடுக்கவும், குவாரிகளின் செயல் பாடுகளைத் துல்லியமாகக் கண் காணிக்கவும் அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

எம்அய்எம்ஏஎஸ் இணையதளம்: கனிம வளங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்க கனிமவள நிர்வாகம் எனும் டிஜிட்டல் முறை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, இது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது.

சுரங்கப் பணிகளால் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பகுதிகளின் மேம்பாட்டிற்காக இந்த அமைச்சகம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது: “சுரங்கப் பகுதிகளில் குடிநீர், சாலை வசதி மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த இதுவரை ரூ.1,000 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.” மேலும், கைவிடப்பட்ட குவாரிகளைப் பாதுகாப்பான இடங்களாக மாற்றவும், சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் தனிச் சிறப்பாக ‘பசுமை நிதி’ உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சவால்களை எதிர்கொள்ள ‘நிலையான சுரங்கக் கொள்கை’ நிர்வாக ரீதியாகப் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், ஆற்று மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோத குவாரிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவது இன்னும் பெரும் சவாலாகவே நீடிக்கிறது. இச்சவால்களை முறியடிக்கவும், முறைகேடுகளை முற்றுப்புள்ளியாகக் குறைக்கவும், தமிழ்நாடு அரசு தற்போது ஒரு விரிவான ‘நிலையான சுரங்கக் கொள்கையை’ உருவாக்கி வருகிறது.

இந்தக் கொள்கை அமலுக்கு வரும்போது, இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் வருவாய் ஈட்டுவதில் தமிழ்நாடு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *