‘பெரியார் பேசுகிறார்’ நிகழ்வில் மும்பை மாநாட்டுச் சிறப்புகள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவெறும்பூர், மார்ச் 20- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாட்டில் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் தமிழ், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்  சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை மாநாடு மும்பையில் நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினர்.

இந்நிகழ்விற்குத் தமிழ்நாட்டில் இருந்து அய்ம்பதிற்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கு பெற்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலில், ஆலோசனையில் மும்பைத் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விரண்டு நாள் மாநாடு, அதன் அனுபவங்கள், சிறப்புகள், பயணங்கள் ஆகியவைக் குறித்து திருவெறும்பூர் பெரியார் பேசுகிறார் 16 ஆவது நிகழ்ச்சியில் பெருவளப்பூர் வெ.சித்தார்த்தன் பேசினார்.

“மராத்திய மண்ணில் திராவிடர் கழகம் எப்படி செயல்படுகிறது, பல்வேறு அமைப்புகள் மற்றும் மக்களின் ஆதரவு நிலை குறித்து எடுத்துக் கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாநாட்டை அறிவித்தவுடன், மும்பைத் தோழர்களின் சுறுசுறுப்பு, அவர்களின் ஒருங்கிணைப்புப் பணிகள், மாநாட்டின் சாதனைகள் ஆகியவைக் குறித்தும் வெ.சித்தார்த்தன் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

15.03.2026 ஞாயிறன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு மு.சேகர், பு.வி.கியூபா, ப.கவு.யாழினி, மு.ஆண்டிராஜ், ம.ஆறுமுகம், ம.சங்கிலிமுத்து, இரா.தமிழ்ச்சுடர், சி.பஞ்சலிங்கம், ஆர்.விஜயராகவன், சி.கனகராசு, அ.சிவானந்தம், ஆ.பாண்டிக்குமார், ஆ.இராஜாராமன், க.புனிதா, வி.சி.வில்வம் உள்ளிட்ட தோழர்கள் பங்குபெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *