சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் 18.03.2026 அன்று மாலை தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டிலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் பி.எச். மனோஜ் பாண்டியன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்றது. இதில் பெண் வழக்குரைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தி.மு.கழகத்தின் கொள்கைகளை ஏற்று இணைந்தனர்.
குறிப்பாக பி. விஜயகுமார் டி. நந்தகுமார் ஏ. சத்யா சி. ராகவன் ஏ.டி. நாகேந்திரன் எஸ். குணசேகரன், எம். பெருமாள் ஜி. ஜெய்சிங்க முத்துக்குமரன் எஸ். பாலாஜி ரோட்டரி என். சிவக்குமார் நிக்சன், அதிசயயா, டி. பவித்ரா, பி. லீனா உள்ளிட்ட முக்கிய வழக்குரைஞர்கள் முதலமைச்சர் முன்னிலையில் முறைப்படி தி.மு.கழகத்தில் இணைந்தனர்.
இந்த இணைவு விழாவின் போது, அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தி.மு.க சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா. விடு தலை, வழக்குரைஞர் திருமாறன், மற்றும் வழக்குரைஞர் ஆர்.வி. பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
