‘ஆவணங்கள் இருந்தால் பயப்படத் தேவையில்லை’! பணம், நகை பறிமுதல் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்!

1 Min Read

சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விரிவான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்கான 7 நாட்களில் 2 நாட்கள் விடுமுறை என்பதால், மீதமுள்ள 5 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

தேர்தல் விதிமுறைகளை உறுதிப்படுத்த 2,106 பறக்கும் படை வீரர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், உரிய ஆவணங்கள் இன்றி அதிகப்படியான பணமோ அல்லது நகைகளோ கொண்டு செல்லப்பட்டால் மட்டுமே பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆதாரங்களை வைத்திருந்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் உறுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5.67 கோடி வாக்காளர்களும் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தகுந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *