திருச்சி, மார்ச் 17- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை (28.2.2026) முன்னிட்டு மாணவர்களின் படைப்பாற்றலையும் சிந்தனைத் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடைபெற்றன.
27.2.2026 அன்று நடைபெற்ற இப்போட்டிகளில், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஈடு பாட்டுடனும் பங்கேற்றுத் தங்களது அறிவியல் புலமையை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டியும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன.
வெற்றி வாகை சூடிய மாணவர்கள்:
நடுவர்களின் சீரிய மதிப்பீட் டின் அடிப்படையில், பல்வேறு நிலை களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம் பின்வருமாறு:
பேச்சுப் போட்டி
முதலிடம்: எஸ். முகுல், இரண்டாமிடம்: ஆர். ராஜசிறீ, மூன்றாமிடம்: பி. சண்முகவேல்
கட்டுரைப் போட்டி
முதலிடம்: எஸ். நீரஜா (எட்டாம் வகுப்பு), இரண்டாமிடம்: எஸ். பி. கவுதிக் யூபன் (ஆறாம் வகுப்பு), மூன்றாமிடம்: எஸ்.நித்யசிறீ (ஏழாம் வகுப்பு)
பரிசளிப்பு மற்றும் பாராட்டு:
வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்குப் பள்ளியின் முதல்வர் முனைவர் க. வனிதா பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ் களையும் வழங்கிச் சிறப்பித்தார். அப்போது அவர் ஆற்றிய உரை யில், “மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடாமல், அன்றாட வாழ்வில் அறிவியலின் நுட்பங்களை உணர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்” என்று ஊக்கப்படுத்தினார்.
சிறப்பான ஒருங்கிணைப்பு:
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர், பள்ளியின் முதுகலை கணித ஆசிரியர், கி.ஜெயகாந்தன் மிக நேர்த்தியாகச் செய்திருந்தார். அவரை பள்ளி நிர்வாகமும் முதல்வரும் வெகுவாகப் பாராட்டித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
