சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு

Viduthalai
1 Min Read

பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு 

அரசியல்

சென்னை, ஏப்.11- சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று  (10.4.2023) நடைபெற் றது. பின்னர் அத்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வெளியிட்ட அறிவிப்பில் இடம் பெற்றிருப் பதாவது:

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புனர மைப்பு பணிகள் ரூ.80 கோடியில் உலகத் தரத்தில் மேற்கொள் ளப்படும்.

டாக்டர் சி.நடே சனார்,  சர்.பிட்டி தியாக ராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரின் சிறப்புகள், பெருமை களை எதிர்காலத் தலை முறையினர் அறியும் வகையில் திராவிட இயக்க சரித்திர நிகழ்வு களை தாங்கி ஒரு வர லாற்று சின்னம் அமை யும் அளவுக்கு ‘திராவிட இயக்க தீரர்கள் கோட் டம்’ தலைநகர் சென்னை யில் அமைக்கப்படும்.

சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனி யார் பங்களிப்புடன் அமைக்கப்படும். தமிழ் நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். 

பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிர மாகவும், குடும்ப ஓய்வூ தியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமா கவும் உயர்த்தப்படும்.

பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங் களில் மட்டும் உள்ளது. பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் இந்த வசதி சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகங்களில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சரின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *