சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி வீர மரணம் இன்று (8.3.1958)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்கக் கோரி தந்தை பெரியார் மாபெரும் போராட்டத்தை அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக ஜாதியைப் பாதுகாக்கும் (26.11.1957) சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். (3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க  அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டது).

திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமியும் சிறையிலேயே உயிர் நீத்தனர். சிறைக்குள்ளேயே புதைத்து விட்டனர்!

அன்னை மணியம்மையார் இந்தச் செய்தியறிந்து கொதித்தெழுந்தார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் நேரடியாக அப்போதைய முதலமைச்சர் காமராசர் அவர்களை  சந்தித்ததன் விளைவாக சிறைக்குள் புதைக்கப்பட்ட மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகியாரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு  கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

உடல்கள் பெறப்பட்ட பிறகு, திருச்சியில் அன்னை மணியம்மையார் தலைமையில் எழுச்சிமிக்க இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான தொண்டர் களும், பொதுமக்களும் திரண்டு வந்து “வீர வணக்கம்” செலுத்தினர்.

அன்னை மணியம்மையாரின் தலைமைப் பண்பையும் உறுதிப் படுத்தியது.

ஜாதி ஒழிப்புக்காக உயிர்நீத்த அந்த வீரர்களின் தியாகம் இன்றும் திராவிட இயக்க மேடைகளில் நினைவு கூரப்படுகிறது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *