அந்தோ, கோவை ச.சிற்றரசு மறைந்தாரே! கோவை மண்டலச் செயலாளர்

Viduthalai
2 Min Read

அரசியல், இரங்கல் அறிக்கை

ச.சிற்றரசு இன்று (13.04.2023) அகால மரண மடைந்தார் என்ற செய்தி நமக்குப் பேர‌திர்ச்சியைத் தந்த‌து. தோழர் சிற்றரசு, கழகத்தின் சார்பில் எந்தப் பணிகள் வழங்கப் பட்டாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடிய செயல்வீரராகத் திகழ்ந்தவர். அவரது திடீர் மறைவால் இழப்புக்கு ஆளாகி யிருக்கும் அவர்தம் தாயார், வாழ்விணையர் ராஜேஸ்வரி, மகன் இரா.சி.பிரபாகரன் மற்றும் கழகத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்  தெரிவித்துக் கொள் கிறோம். அவரது இழப்பு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்; நமக்கு எல்லையில்லா சோகத்தையும் துன்பத்தையும் தருவதாகும். இயற்கையின் கோணல் புத்தி என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல‌?

                                                                                                                                          கி. வீரமணி 

சென்னை                                                                                                                       தலைவர், 

13.4.2023                                                                                                      திராவிடர் கழகம் 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *