ஒடுக்கப்பட்டவர் ஒரே ஒருவர்! பிற்படுத்தப்பட்டோரில் அதுவும் இல்லை! இது தான் நிலைமை! இப்படியே இருக்கட்டுமா? உங்கள் பதில் என்ன?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சரவை மற்றும் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர்.

இதில்,

எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) – 16

எஸ்.டி (பழங்குடியினர்) – 19

ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) – 39

மட்டும் தான்!

அது ஏன், செயலாளர்களையும், இணைச் செயலாளர்களையும் சேர்த்து கணக்குச் சொன்னார்கள். ஒவ்வொன்றிலும் தனியாக எவ்வளவு பேர் என்று சொல்ல வேண்டாமா?

ஏனெனில், உயர் அதிகாரத்தில் இருக்கும் செயலாளர்கள் விவரம் கடைசியாக 2019-இல் தான் சொல்லப்பட்டது.

2019-ஆம் ஆண்டு நிலவரப்படி,

மொத்தமுள்ள 89 செயலாளர்களில்,

பழங்குடியினர் (ST) – 3

ஒடுக்கப்பட்டோர் (SC) – 1

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 0

ஆம், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்!

இந்த விவரங்களையெல்லாம் மறைப்பதற்காகத் தான், அடுத்தடுத்த ஆண்டுகளில் தெளிவான புள்ளிவிவரங்களைத் தர மறுக்கிறார்கள்.

இந்தச் சமூக அநீதிகளையெல்லாம் மூடி மறைக்கத்தான் முயல்கிறார்கள். சரி செய்ய முயலவில்லை.

சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறச் சீற்றம் மிகுந்த அறிக்கை ஏன், போராட்ட அறைகூவல் ஏன் என்று இப்போது புரிகிறதா?

இந்திய வரலாற்றில் முதல் முறையாக இடஒதுக்கீட்டுக்குத் தடையில்லை என்ற நிலையை முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலமாக நிறுவியவர் தலைவர் தந்தை பெரியார்!

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ‘சுதந்திர’ இந்தியாவில் 46 ஆண்டுகள் கழித்தாவது கிடைத்ததே! அந்த உரிமையைப் போராடி வென்றவர் தமிழர் தலைவர் ஆசிரியர்!

கருப்புச் சட்டைகள் தான் முன்னின்று போராடினோம்! வென்றோம்!

அந்த வெற்றியை முழுமையாக அடைய வேண்டாமா?

வழிகாட்டுகிறார் ஆசிரியர்!

இன்றும் முன் களப் போராளியாக

கொடியேந்திக் களத்திற்கு வருகிறார் – தனது 93 வயதில்!

அணி அணியாய்த் திரள்வோம்!

தமிழ்நாடெங்கும் “பல்லாயிரக்கணக்கில் திரண்டனர் கருப்புடை தரித்த நெருப்புப் பிழம்பென!” என்று வரலாறு எழுதட்டும்!

வாருங்கள் தோழர்களே – களத்தை நோக்கி!

– கருஞ்சிறுத்தை

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *