தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் மற்றும் நிருவாகிகள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். உடன், தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் .பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன். தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள்
பூச்சி எஸ். முருகன், துறைமுகம் காஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளனர். (சென்னை, 27.2.2026)
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைந்தார்!
Leave a Comment
