சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 குளிர்சாதனப் பேருந்து உட்பட 194 புதிய பேருந்துகளின் சேவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 27- மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, குளிர்சாதன வசதி கொண்ட 100 பேருந்துகள் உட்பட 194 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன், சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையில் 4ஆவது கட்டமாக, ரூ.52 கோடி மதிப்பில், பல்லவன் மத்திய பணிமனையில் மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் ரூ.248.25 கோடி மதிப்பில் 100 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகள், 45 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுபோல, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, ரூ.30.50 கோடி மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 49 அதிநவீன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத் துறை செயலர் சுன்சோங்கம்ஜடக் சிரு உட்பட பலர் பங்கேற்றனர்.

வீரர்களுக்கு நிதியுதவி

தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ, தடகளம், நீச்சல் மற்றும் கால்பந்து போட்டிகளில் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளிகளான 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.24 லட்ச நிதியுதவிக்கான காசோலையை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *