கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.2.2026

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* இந்திய விவசாயிகளுக்கு எதிரான அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து, ம.பி.யில் காங்கிரஸ் போராட்டம்; ராகுல், கார்கே பங்கேற்கின்றனர்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கருநாடகாவில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட பாஜக எம்.எல்.ஏ. சந்துருலமானி, கைது; மார்ச் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு.

* ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் கேரளாவில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாணவர் அமைப்புகள், மாட்டிறைச்சி விழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

* தெலங்கானா கும்மேராவில் கோவிலில் நுழைய ரூ.100 கட்டணம் செலுத்துவதற்கு ரசீது கேட்ட பட்டியலினப் பெண் மீது வன்முறை; மோதலில் பெண்ணின் கைக்குழந்தை சாவு. கோவில் நிர்வாகிகள் மூன்று பேர் கைது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜே.என்.யு. பல்கலைக்கழக துணை வேந்தரின் ஜாதியவாத கருத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்; யு.ஜி.சியின் சமபங்கு விதிகள் ‘பகுத்தறிவற்றது’ என்றும், பாதிக்கப்பட்டோர் என்ற அடையாளத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற முடியாது என்றும் கூறியதற்கு கடும் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அரசுப் பணி மற்றும் கல்வியில் 5 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் மகாராட்டிரா அரசின் நடவடிக்கைக்கு எதிராக  மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. முஸ்லிம் மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

* மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ஏன் நீங்கள் அனுமதிக்கவில்லை? கோயம்புத்தூருக்கு மெட்ரோ எங்கே? எய்ம்ஸ் திட்டம் ஏன் தொடங்கப் படவில்லை? ‘மரணத் தேர்வு’ நீட் தேர்வி;ல் இருந்து நம் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏன் நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்கள்?” மதுரை வருகையின் போது பிரதமர் மோடியிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தி இந்து:

* கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டன: ஒன்றிய அரசின் அறிக்கை வெளியீடு. மூலப்பொருள், வங்கி வட்டி விகிதங்கள் அல்லது மின்சாரச் செலவு காரணமாக பல சிறு அளவிலான ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக நூற்பு ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

* பாஜக ஆட்சியின் “இரட்டை இயந்திரம்” அரியானாவில் கொடூரமான காட்டுமிராண்டித்தனம்! திரிபுராவைச் சேர்ந்த 19 வயது பெண் குருகிராம் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு, அவரது லிவ்-இன் பார்ட்னரால் மூன்று நாட்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். பாஜகவின் ஆட்சியில் 2026. சதி பிரதா பாஜக மாநிலங்களில் இன்றும் உள்ளது; அங்கு பெண்கள் இன்னும் எரிக்கப்படுகிறார்கள், கொடூரமாக நடத்தப்படுகிறார்கள், அரியானாவில் 131 கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் உட்பட 1,772 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் சுட்டிக்காட்டியது.

குடந்தை கருணா

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *