


21.2.2026 அன்று மாலை 4 மணிக்கு தஞ்சையில் திராவிடர் இன எழுச்சிப் பேரணி நடைபெற்றது. காண்போரைக் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் ஒவ்வோர் அணியும் பேரணியில் அணிவகுத்தனர். தஞ்சை பெரியார் நினைவுத் தூண் புது ஆத்துப்பாலம் அருகில் தொடங்கி – பெரியார், அண்ணா, கலைஞர் சிலை, கீழவாசல், தொண்டி ராஜபாளையம், கீழராஜ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக மாநாட்டு திடலான திலகர் திடலை வந்தடைந்தது. அந்தியூர் கலைவாணர் கலைக்குழு, சடையார்கோவில் நாராயணசாமி கோலாட்டக்குழு, கரம்பக்குடி வீரவிளையாட்டுக் கழகம், தஞ்சை பொய்யாமொழியின் தண்டர் வீரவிளையாட்டுக் கழகம் ஆகியோர் இப்பேரணியில் பங்கேற்றனர். திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் மற்றும் பொறுப்பாளர்கள் தோழர்கள் மற்றும் குழந்தைகள் தொடங்கி குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் வரை அனைவரும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
