வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உணவுத் திருவிழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வெட்டிக்காடு, பிப். 21- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உணவுத் திருவிழா பள்ளியில் இரண்டு குழுக்களாக பிரித்து இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது.

ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு மாணவர்கள் 16.2.2026 அன்றும் 6- முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 17.2.2026 அன்றும் வகுப்பு வாரியாக வழங்கப்பட்ட உணவு வகைகளை சிறந்த முறையில் தயாரித்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது மட்டுமல்லாமல் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கி உடலுக்கும் உள்ளத்திற்கும் மனநிறைவை அளித்தனர்.

காட்சிப்படுத்திய உணவு வகைகள் வகுப்பு வாரியாக முதல் வகுப்பு அ பிரிவு – பாசிப்பயறு வகை உணவுகள்

முதல் வகுப்பு ஆ பிரிவு – பழச்சாறுகள்

இரண்டாம் வகுப்பு- கம்பு வகை உணவுகள்

மூன்றாம் வகுப்பு -பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பழவகை உணவுகள்

நான்காம் வகுப்பு- சோறு  வகைகள்

அய்ந்தாம் வகுப்பு- சுண்டல் வகைகள்

ஆறாம் வகுப்பு -உளுந்து வகை உணவுகள்

ஏழாம் வகுப்பு- கீரை வகை உணவுகள்

எட்டாம் வகுப்பு – காய்கறி வகை உணவுகள்

ஒன்பதாம் வகுப்பு -கேழ்வரகு வகை உணவுகள்

இவ்வாறாக அனை வரும் பிரம்மிக்கும் வகையில்  பாரம்பரியமான உணவுகளை தயாரித்து வழங்கி சிறப்பித்தனர். இறுதியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அவர்கள் பரிசுகள் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோ ருக்கும் நன்றி தெரிவித்தார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *