எகிப்துக்கு முன் தோன்றியதா சிந்து சமவெளி நாகரிகம்… 8,000 ஆண்டுகள் பழைமையான சான்றுகள் சிக்கியது!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வட இந்தியாவின் பிர்ரானாவில் (Bhirrana) கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் விலங்குகளின் எஞ்சிய பகுதிகளை ஆய்வு செய்த நிபுணர்கள், இந்த பழங்கால சமூகத்தின் வேர்கள் 8,000 ஆண்டுகள் பழைமையானவை என்கின்றனர். இது உறுதிப்படுத்தப்பட்டால், எகிப்தின் முதல் பார்வோன்களின் (Pharaohs) காலத்திற்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிவிட்டது என்பது உறுதியாகும்.

பல்லாண்டு காலமாக, பள்ளிப் பாடப்புத்தகங்கள் பண்டைய உலகின் நாகரிகங்களை மெசபடோமியா, அதனைத் தொடர்ந்து பிரமிடுகளின் தேசமான எகிப்து, மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் என்ற வரிசையிலேயே கற்பித்து வந்துள்ளன. ஆனால், தற்போது நடத்தப்பட்ட காலவரிசை ஆய்வு இந்த வரலாற்றை மாற்றியமைக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம், தோராயமாக கி.மு. 2600 முதல் கி.மு. 1900 வரை செழித்தோங்கியதாக நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்தது. இது உலகின் ஆரம்பகால நகர கலாச்சாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், பிர்ரானாவில் நடத்தப்பட்ட புதிய கார்பன் டேட்டிங் (Carbon dating) சோதனை, இந்த காலவரிசையை மேலும் பின்னோக்கித் தள்ளி உள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் கூட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், தொன்மையான குடியிருப்பு அடுக்குகளில் இருந்து மட்பாண்டத் துண்டுகள் மற்றும் விலங்குகளின் எலும்புகளை பகுப்பாய்வு செய்தனர். இதன் ரேடியோகார்பன் முடிவுகள், சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் குடியிருப்புகள் இருந்ததை உணர்த்துகின்றன. ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், இப்பகுதியில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சமூகங்கள் முன்பே நம்பப்பட்டதை விட முன்னதாகவே உருவாகியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா போன்ற தளங்கள், கிரிட் அமைப்பில் கவனமாக திட்டமிடப்பட்ட தெருக்களை வெளிப்படுத்துகின்றன. பல வீடுகள் கிணறு, முற்றங்கள் மற்றும் குளியல் பகுதிகளுக்கான வசதிகளை கொண்டிருந்தன. தெருக்களுக்கடியில் மூடிய வடிகால் அமைப்புகள் இருந்தன, இவை உலகின் ஆரம்பகால நகர சுகாதார அமைப்புகளில் ஒன்றாக நிபுணர்களால் விவரிக்கப்படுகின்றன.

சில வீடுகள் 2 தளங்களைக் கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. பெரிய தானியக் களஞ்சியங்கள், சந்தைகள் மற்றும் கப்பல் கட்டும் தளங்கள் (Dockyards) சிக்கலான பொருளாதார அமைப்பை உணர்த்துகின்றன.

வியப்பான வகையில், எகிப்தில் காணப்படுவது போன்ற பெரிய கோவில்களோ, அரச மாளிகைகளோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப் படவில்லை. இந்த பற்றாக்குறை, குறைந்த அளவிலான அதிகார மய்யப்படுத்தப்பட்ட நிர்வாக முறையைக் குறிக்கலாம், இருப்பினும் பல கேள்விகளுக்கு இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை.

அதன் உச்சக்கட்டத்தில், சிந்து நாகரிகம் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டிருந்திருக்கலாம், இது அக்கால உலக மக்கள் தொகையில் கணிசமான பகுதியாகும். இதன் ஆதிக்கப் பகுதி அரபிக்கடலில் இருந்து கங்கை வடிநிலம் வரை நீண்டு, பண்டைய உலகின் மிகப்பெரிய கலாச்சார மண்டலங்களில் ஒன்றாக அமைந்தது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நுணுக்கமாக துளையிடப்பட்ட ரத்தின மணிகள், தரப்படுத்தப்பட்ட கல் எடைகள், தாமிரம் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட உலோகக் கருவிகள், சிந்துச் சமவெளி ஸ்கிரிப்ட் (Script) பொறிக்கப்பட்ட முத்திரைகளை கண்டெடுத்துள்ளனர். பல தசாப்தங்களாக ஆய்வு செய்த போதிலும், சிந்து சமவெளியின் எழுத்து முறை ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

பல ஆண்டுகளாக, சிந்துச் சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு காலநிலை மாற்றமே முக்கியக் காரணியாக அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. பருவமழை அமைப்புகள் பலவீனமடைந்தது மற்றும் நதி அமைப்புகள் வறண்டது விவசாயம் மற்றும் வர்த்தகத்தை பாதித்திருக்கலாம்.

இருப்பினும், பிர்ரானாவின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் திடீர் சரிவுக்குப் பதிலாக, படிப்படியான மாற்றத்தை உணர்த்துகின்றன. சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப, அதிக நீர் தேவைப்படும் கோதுமை மற்றும் பார்லிக்கு பதிலாக, தினை மற்றும் அரிசி போன்ற வறட்சியைத் தாங்கும் பயிர்களுக்கு மக்கள் மாறியதற்கான சான்றுகள் உள்ளன. திடீர் வீழ்ச்சிக்கு பதிலாக, இந்நாகரிகம் காலப்போக்கில் படிப்படியாக சிறிய குடியிருப்புகளாக சிதறிப் போயிருக்கலாம். இடம்பெயர்வு, வெள்ளம், நோய் அல்லது சமூக மாற்றம் உள்ளிட்ட பிற கோட்பாடுகள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *